கீரிப்பட்டியில் அரசு ஊழியர்களை மிரட்டி வரும் திமுக நகர பொறுப்பாளர், மன உளைச்சலில் கூட்டுறவு சங்க ஊழியர்கள்.
திமுகவைச் சேர்ந்தவர்கள் தவறு செய்தாலும் சின்ன குற்றத்தில் ஈடுபட்டாலும், இந்த ஸ்டாலின் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்..! இது அண்ணா மீது, கலைஞர் மீது ஆணை..! என்று சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சரின் பேச்சு காத்தோட போச்சா..!என்று மக்கள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கீரிப்பட்டி பேரூராட்சியில் உள்ள தமிழ்நாடு அரசின் S.55 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 1942 -ஆம் ஆண்டு முதல் நல்ல லாபத்தில் இயங்கிவருகிறது. இதில் சுமார் 3000 -க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.இந்நிலையில் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் அரசு ஊழியர்களை மிரட்டி பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்து வரும் திமுக நகர பொறுப்பாளர் காங்கு (எ) காங்கமுத்து, கட்டப்பஞ்சாயத்து இடிமுரசு (எ) ராமகோவிந்தன் மற்றும் டிரைவர் சதீஷ், பால் வியாபாரி ஆதிமூலம், சாராய வியாபாரி விமல்சேகர் ஆகியோர் அவ்வப்போது அலுவலகத்திற்கு சென்று அரசு ஊழியர்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

மேலும் நேற்று மாலை அலுவலகத்தில் இருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உருவ படங்கள் இந்த அலுவலகத்தில் இருக்க கூடாது என்றும் எங்களை கேட்காமல் யாருக்கும் பயிர்க்கடன் வழங்க கூடாது, இனி நாங்கள் சொல்வதை தான் நீங்கள் கேட்க வேண்டும் மீறினால் தொலைத்து விடுவோம் என மிரட்டல் விடுவதோடு செய்யாத குற்றத்தை செய்தது போல எழுதி கொடு என மிரட்டுவதால் கூட்டுறவு சங்க ஊழியர்கள் மன உளைச்சலில் திணறி, தற்கொலை முயற்சிக்கு தள்ளப்படுகின்றனர்.

திமுக கட்சிக்கும், மக்களின் நேர்மையான ஆட்சிக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொள்கைக்கும், சென்னை உயர் நீதிமன்றத்திற்கும், எதிராக அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்வது மற்றும் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, சட்டவிரோதமாக மது பானங்கள் விற்பனை செய்வது போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் அடியாட்களை கொண்டு ஈடுபட்டு வரும் மாற்று கட்சியிலிருந்து குறுக்கு வழியில் வந்த கீரிப்பட்டி (பேரூராட்சி) திமுக நகர பொறுப்பாளர் காங்கு (எ) காங்கமுத்து மீது நடவடிக்கை எடுக்க திமுக கட்சியினரும் பொதுமக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.உளவுத்துறை களமிறங்கி விசாரித்தால் இக்கதயின் உண்மை காட்சிகள் வெட்ட வெளிச்சமாகும்…
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]