ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கிருஷ்ணாம்பட்டினம் எனும் கிராமத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் ஆனந்தய்யாவை நினைவிருக்கிறதா?
உலகமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த போது இவர் உருவாக்கிய நாட்டு மருந்து, கொரோனா வைரஸ் தொற்றை அரை மணி நேரத்தில் குணப்படுத்துவதாக பேச்சு எழுந்தது. மேலும் அந்த மருந்தை அவர் லாபநோக்கம் இன்றி இலவசமாகவே மக்களுக்கு வழங்கி வந்தார்.
மேலும், தீவிர நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடியவர்கள் கூட இந்த மருந்து உட்கொண்டு நலம்பெற்று நடமாடத் தொடங்கினர். தனியார் மருத்துவமனைகளில் பல லட்ச ரூபாய் செலவிட்டு உயிரை காப்பாற்ற போராட்டம் நடத்த வேண்டிய நிலையில், ஆனந்தய்யாவின் மருந்தும் அதனுடைய அற்புத ஆற்றல் குறித்த தகவல் காட்டுத்தீயாக பரவிய நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த மருந்தை வாங்குவதற்காக கிருஷ்ணாம்பட்டினம் கிராமத்திற்கு படையெடுத்தனர். இதனால் சுமார் 5 – 6 கிமீ தொலைவுக்கு வாகன நெரிசல் ஏற்பட்டு, அதனை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர். இரண்டாம் அலை பரவலின் போது ஆனந்தய்யா ஆபத்பாந்தவனாக திகழ்ந்தார்.
இவருடைய மருந்து குறித்து அறிந்து மாநில அரசே முன்வந்து பரிசோதனை நடத்தியதில் பக்கவிளைவுகள் ஏதும் இல்லை என உறுதி செய்தது. உள்ளூர் மக்களும் ஆனந்தய்யாவின் மருந்தை புகழ்ந்தனர். ஒரு கட்டத்தில் மாநில அரசு ஆனந்தய்யாவை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்த நிகழ்வும் அரங்கேறியது.
தற்போது, ஒமிக்ரான் தொற்று வீரியமாக பரவி வரும் நிலையில் அனந்தய்யா மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறார். ஒமிக்ரானை குணப்படுத்தும் மூலிகை மருந்தை இவர் தயாரித்து தற்போது பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இது குறித்து அறிந்த பொதுமக்கள் அக்கம்பக்கத்து கிராமங்கள், நகரங்களில் இருந்து அனந்தய்யாவிடம் இருந்து மருந்தை வாங்க கிருஷ்ணாம்பட்டினம் கிராமத்தில் குவியத் தொடங்கியிருக்கின்றனர்.
ஆனால் இம்முறை உள்ளூர் மக்கள் ஆனந்தய்யாவுக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பியிருக்கின்றனர். இந்த புதிய மருந்தை பயன்படுத்த சுகாதாரத்துறையினரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா என கேள்வியெழுப்பும் கிராம மக்கள், அதிகளவில் பொதுமக்கள் குவிவதால் தங்கள் பகுதியில் நோய்த்தொற்று பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி ஆனந்தய்யாவின் வீட்டு முன் போராட்டம் நடத்தினர். பின்னர் காவல்துறையினர் வந்து சமாதானம் செய்து கலைந்து போக வைத்தனர்.
- பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.மைத்ரேயன் […]
- ஜப்பான் சென்ற முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் – பாஜக பொதுச்செயலாளர் பேட்டிமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக […]
- தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தை பாம்புகடித்து பலிதிருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 […]
- தமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த காட்டு யானைதமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் […]
- ரோடா இது ?புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதாரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை […]
- மாதாந்திர உதவித் தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனுதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பர் உரிமை சங்கத்தின் சார்பாக இன்று மதுரை மாவட்ட […]
- மதுரையில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி.!!சேலத்தை தலைமையிடமாக கொண்ட விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் […]
- ரயில் ஓட்டுநர்களுக்கு கடும் விதிகள்ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட் பணி நேரத்தின்போது பாண் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஐஸ்வர்யம் ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ, லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்லவீட்டு வாசலில் பெண் […]
- இன்று காந்தவியல் கண்டுபிடிப்பாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள்மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள் இன்று (ஜூன் 10, […]
- பொது அறிவு வினா விடைகள்
- அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் தொகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்மதுரையில் அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் […]
- இன்று தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள்நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த தொடர்வண்டிப் பாதையின் தந்தை, இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள் […]
- வாட்ஸ்அப்-க்கும் வந்தாச்சு ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம்!வாட்ஸ்அப் செயலியில் விரைவில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை (Feature) கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகில் […]
- குறள் 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் […]