• Fri. May 17th, 2024

உசிலம்பட்டியில் மக்களுடன் முதல்வர் முகாம்

ByP.Thangapandi

Dec 23, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்|டி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம் இன்று உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமினை உசிலம்பட்டி நகர் மன்ற தலைவர் சகுந்தலா, உசிலம்பட்டி வட்டாச்சியர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் துவக்கி வைத்து ஆய்வு செய்தனர்.

மேலும் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *