• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த பாஜக எம்.பி நிஷிகாந்த்துபே..,

புது தில்லி: உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே பேசியுள்ளார். அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து, உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால், நாடாளுமன்றத்தை மூடிவிடுவது நல்லது என்று பதிவு செய்துள்ளார்.

பின்னர், செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியிலும் அவர் உச்ச நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தார். உச்ச நீதிமன்றம் அதன் எல்லைகளை மீறுகிறது என்று நிஷிகாந்த் துபே ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் கூறினார். அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 368-ன் கீழ் நாடாளுமன்றத்திற்கு சட்டங்களை இயற்றும் உரிமை உள்ளது. இந்த சட்டங்களை நீதிமன்றம் வியாக்கியானம் செய்கிறது. ஆனால், நீதிமன்றம் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு சட்டங்களை இயற்றுவது குறித்து அறிவுறுத்தல்களை வழங்குகிறது. ராம ஜென்மபூமி, கிருஷ்ண ஜென்மபூமி, ஞானவாபி ஆகியவை உங்கள் முன் வரும்போது ஆவணங்களை கேட்பீர்கள். ஆனால், முகலாயர்களால் கட்டப்பட்ட மசூதிகளின் விஷயத்தில் எந்த ஆவணங்களையும் கேட்க மாட்டீர்கள் என்றும் அவர் உச்ச நீதிமன்றத்தை விமர்சித்தார்.

இதற்கிடையில், பாஜக இந்த அறிக்கையிலிருந்து விலகுகிறது. நிஷிகாந்த் துபே உச்ச நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதிக்கு எதிராக வெளியிட்ட அறிக்கை குறித்து பாஜகவால் எதுவும் சொல்ல முடியாது என்று கட்சி தலைவர் ஜே.பி. நட்டா கூறினார். இது தனிப்பட்ட கருத்து மட்டுமே. அதை பாஜக ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை. இந்த அறிக்கையை நிராகரிக்கிறோம் என்றும் நட்டா தெளிவுபடுத்தினார்.
முன்னதாக, துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரும் உச்ச நீதிமன்றத்தை விமர்சித்தார். மசோதாக்களில் ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் முடிவெடுப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியது. இதைத் தொடர்ந்து, ஆளும் கட்சி தலைவர்கள் நீதிமன்ற விமர்சனத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.