• Sat. Feb 14th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

அரியலூரில் எம்ஜிஆர்,பெரியார் நினைவுநாள்..,

ByT. Balasubramaniyam

Dec 24, 2025

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி அரியலூரிலுள்ள அவர்களது சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக,மங்காய் பிள்ளையார் கோயில் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் , அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் முன்புள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை களுக்கும் , அதனை தொடர்ந்து செட்டியேரி க்கரை பூங்காவில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கும், முன்னாள் அரசு தலைமை கொறடா , மாவட்ட அதிமுக செயலாளர் தாமரை எஸ். இராஜேந்திரன் தலைமையில் முன்னாள் எம்பி ஆ.இளவரசன், முன்னாள் எம்எல்ஏ ப.இளவழகன், மாவட்ட நிர்வாகிகள் பவானி, அன்பழகன், சார்பு அணிநிர்வாகிகள் ஓபிசங்கர், ந .பிரேம்குமார், சிவசங்கர், ஜீவா அரங்கநாதன், திருமுருகன்,ஓ வெங்கடா ஜலபதி, நகரச் செயலாளர் ஏ.பி.செந்தில், ஒன்றியச் செயலாளர்கள் பொய்யூர் பாலசுப்பிரமணியம், செல்வராசு அதிமுக நிர்வாகிகள் ஏ.பி. ஜோதிவேல், தளபதி கணேசன், கே.கருணாநிதி, உட்பட பலரும் கலந்து கொண்டு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.