• Sun. Mar 8th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் நவீன புதிய கொலு..,

குமரி மாவட்டம் தலைநகர் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில்
தபால் தலைகள், அஞ்சல் அட்டைகள், கடிதம் சம்பந்தப்பட்ட
உறைகளைக் கொண்டு கொலு அடுக்கில் நவீன புதிய கொலுவை உருவாக்கி

நவராத்திரி விழாவை புதுமையான கோணத்தில், புதிய பார்வையில்
நவராத்திரியை முன்னிட்டு நாகர்கோவில் தலைமை அலுவலக வளாகம் முன்பு அஞ்சல் ஊழியர்கள் அனைவரும் இணைந்து இந்திய அஞ்சல் துறை மக்களுக்கு வழங்குகிற சேவைகளை பிரதிபலிக்கும் வகையில் கொலு ஏற்பாட்டினை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்செந்தில் குமார் தலைமையில் செய்துள்ளனர். பொதுமக்களும் மாணாக்கர்களும் இந்த கொலுவினைக் கண்டுகளித்து சிறப்பிக்குமாறு
அழைப்பு விடுத்துள்ளனர்.

நவராத்திரி விழாவில் வாழ்த்து அட்டைகளை சுமந்து வரும் இந்திய அஞ்சல் துறையின், புதுமையான பார்வையில் இவ்வாண்டு நவராத்திரி விழாவை சிறப்பித்துள்ளனர்.