• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் ஆணவப்படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வி.சி.க. கோரிக்கை..

தமிழகத்தில் ஆணவப்படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவிக்கு வந்த கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட ஆணவப் படுகொலைகள் மற்றும் 3500 தலித்துக்கள் படுகொலை நடந்தது. ஆணவப்படு கொலையை தடுத்து நிறுத்த கோரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

தனி சட்டம் கொண்டு வர தவறினால் வரும் சட்ட மன்ற தேர்தலை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கும் நிலை உருவாகும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.