• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சாலை அமைக்கும் சிறப்பு பணி..,

ByE.Sathyamurthy

Jun 20, 2025

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெருங்குடியில் கல் குட்டை பகுதியில் சாலைகள் படும் மோசமாக இருப்பதால் மக்கள் நடக்க கூட முடியாத அவதிப்பட்டு வந்தார்கள்.

மக்களுக்கு சாலை வசதிகள் இல்லை என்று மாமன்ற உறுப்பினர் எஸ்வி ரவிச்சந்திரன். இடம் கோரிக்கை வைத்தனர்.மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கலைஞர் கருணாநிதி சாலையை புதியதாக இரண்டு கோடி செலவில் புதியதாக சாலை அமைப்பதற்காக பூஜை போடப்பட்டது. இந்த பூஜையை சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ எஸ் அரவிந்த் ரமேஷ் இந்த பூஜையை துவக்கி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மண்டலம் 14 மண்டல குழு தலைவர். பெருங்குடி.s. V.ரவிச்சந்திரன் வட்டச் செயலாளர்,தேவராஜ் ஆறுமுகம், மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என கலந்து கொண்டே இந்த சாலை அமைக்கும் பணியை சிறப்பாக கொண்டாடினார்கள்.