• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பம்பைக்கு சிறப்பு பேருந்து இயக்கம்..,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து பம்பைக்கு இம்மாதம் பதினாறாம் தேதி முதல் ஜனவரி மாதம் இருபதாம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்து கழகம் இன்று(நவம்பர்_14)ம் நாள் தெரிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து காலை 6 மாலை 6:30 இரவு 7 மற்றும் 7:30 மணிகளில் இந்தப் பேருந்து இயக்கப்பட உள்ளது.

சபரிமலைக்கு செல்லும் பேருந்தில் பயணிக்கும் சுவாமிகளும் குறித்த பேருந்துக்கு குறிபிட்ட நேரத்தில், கன்னியாகுமரியில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.