• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஒன்றிய அரசின் செயலுக்கு விஜய் வசந்த் கண்டனம்…

நாடாளுமன்றத்தில் நகை கடன் அணுகுமுறையில் ஒன்றிய அரசின் செயலுக்கு விஜய் வசந்த் கண்டனம் வெளிப்படுத்தி உள்ளார்.

வங்கிகளில் நகை கடன் பெற்றுள்ளவர்கள் நகையை திருப்ப வேண்டிய உரிய நாளில் நகையை திருப்ப முடியாவிட்டால். நகையை திருப்பாமுடியாவிட்டால். நகையை திருப்பாமலே புதிய மனு ஒன்றின் மூலம் நகையை மறு அடமானம் வைத்து வந்த நிலையில், ஒன்றிய அரசின் வங்கிகள். முன்பு விவசாய கடன் என்ற கணக்கில் சாதாரண நகைகடனை விட குறைந்த வட்டி என்று இருந்த நிலையையும் எவ்விதமான அறிவிப்பும் இன்றி. விவசாய நகை கடனிலும் எவ்விதமான அறிவிப்பும் இன்றி மாற்றம் கொண்டு வந்துள்ளது.

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் ஏப்ரல்_3 வங்கிகளில் பெற்ற தங்க நகைக் கடன் தொகைக்கு ஆண்டுதோறும் வட்டித் தொகையை மட்டும் செலுத்தி மறு அடகு வைக்கலாம் என்றிருந்த நிலையில், தற்போது அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்ற “ரிசர்வ் வங்கியின்” புதிய விதியை திருத்த வேண்டும் என இன்று பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் குரல் எழுப்பினார்.

விஜய் வசந்த் தொடர்ந்து வெளிப்படுத்திய கருத்து. சாமானிய ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவரது பேச்சில் வெளிப்படுத்தினார்.