கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களை , குத்தகை விவசாயிகளை அச்சுறுத்தி கைது செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில் நிலங்களில் குடியிருப்போரை கைது செய்வதும், ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு கொடூரங்களை அறநிலையத்துறை சட்ட திருத்தம் செய்ததை கண்டித்தும், அதனை தமிழக அரசு உடனே திரும்ப பெறக் கோரியும், செவ்வாயன்று திண்டுக்கல் இந்து அறநிலையத்துறை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மத்திய குழு உறுப்பினர் சச்சிதானந்தம், முன்னாள் மாநில துணைத் தலைவர் பி செல்வராஜ், மாவட்ட செயலாளர் பெருமாள், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல் ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக சின்னான் மற்றும் கம்பம் கம்பராயப்பெருமாள் கோட்டைமேடு குடியிருப்போர் சங்கம் சார்பாக கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.