• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கதையின் நாயகனாக ப்ரஜின் நடிக்கும் படத்தின் தொடக்க விழா

கதையின் நாயகனாக ப்ரஜின் நடிக்கும் படத்தின் தொடக்க விழா

ப்ரஜின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா இன்று வளசரவாக்கத்தில் நடந்தது.இந்தப் பெயரிடப்படாத புதிய படத்தை ‘பொதுநலன் கருதி’ படத்தை இயக்கிய சீயோன் இயக்குகிறார். பொதுநலன் கருதி என்ற வித்தியாசமான பெயரில் தனது முதல் படத்திலேயே பரவலாகப் பேசப்பட்டவர் இவர், இயக்கும்…

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் நேர்காணல்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணலை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் நடத்தினார். தென்காசி வடக்கு மாவட்ட திமுக செங்கோட்டை ஒன்றியம் புதூர் பேரூராட்சி மற்றும் புளியங்குடி நகராட்சி, வாசு ஒன்றியம் சிவகிரி மற்றும் ராயகிரி பேராட்சி…

மதமாற்றம் செய்வதாக கூறி தலித் குடும்பத்தை வீடு புகுந்து தாக்கிய மதவெறி கும்பல்

கிச்சனில் கொதித்து கொண்டிருந்த சாம்பார் சட்டியை எடுத்து வந்து, கணவன் கண்ணெதிரே, மனைவியின் மீது ஊற்றிவிட்டனர் கொடூரர்கள்.. அது மட்டுமல்ல, அந்த சாம்பார் சட்டியாலேயே மனைவியை போட்டு தாறுமாறாக தாக்கியும் உள்ளனர்.. இதற்கான காரணம் என்னன்னு பாருங்க..! நாடு முழுவதும் சமீப…

திருத்தப்பட்ட தி கிரேட் இண்டியன் படத்தலைப்பு

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவு என்ன என்பதைச் சொல்லியிருந்தஇந்தப் படம் 2021 ஜனவரி 15-ம் தேதி நேரடியாக ஓடிடி…

கூடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் துவக்க விழா

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தேனீக்கள் மாற்றுத்திறனாளிகளின் அறக்கட்டளை மற்றும் வின்னர் ஸ்போர்ட்ஸ் இணைந்து கூடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கானசுயதொழில் துவக்க விழா நடைபெற்றது.                  தேனி மாவட்டம் கூடலூரில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவர் ஆசிரியர் பாண்டி தலைமை வகித்தார். செயலாளர் அழகேசன், பொருளாளர் பாண்டி…

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா. ஆண்டிபட்டியில் கொண்டாட்டம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில் ,அவரின் 263 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு ஆண்டிபட்டியில் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மாலை கோவில் வளாகத்தில் கட்டபொம்மனின் முழு உருவப்படம்…

கர்ப்பிணியிடம் அரசு டாக்டர் வசூல் வேட்டை: பணத்தை திருப்பி அளிக்க உத்தரவிட்ட கலெக்டர்!

‘கர்ப்பிணியிடம் சிகிச்சைக்காக வசூலித்த, 37 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை, அரசு பெண் டாக்டர் திருப்பி வழங்க வேண்டும்’ என திருப்பூர் கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், காரத்தொழுவை சேர்ந்த, 24 வயது கர்ப்பிணி, செப்., 23ல் உடுமலை அரசு…

சோலார் மின் விளக்குகளை திருடிய ஊர் நாட்டாமை

புளியங்குடியில் சோலார் மின் விளக்குகளை திருடிய ஊர் நாட்டாமை கைது. தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி பகுதிகள் சோலார் மற்றும் சோலார் மின் கம்பம் திருட்டு போனது சம்பந்தமாக புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார்சிங் புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.…

நூற்பாலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் தனியார் நூற்பாலை உள்ளது.இந்த நூற்பாலையில் 1500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கடந்த 5 வருடங்களாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்றும் விருப்ப ஓய்வு,பணிக்கொடை வருங்கால வைப்பு நிதி ஆகியவையும் அவர்களுக்கு…

தென்காசியில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்

தென்காசியில் 15 வயது முதல் 18 வயதுள்ள இளம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் 42 பள்ளிகளில் 16972 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதற்கட்டமாக 18 வயது மேற்பட்டவர்ளுக்கு தட்டுப்பூசி செலுத்தப்பட்டது.…